tamilnadu

img

நிர்மலா சீதாராமன் மழுப்பல் பேட்டி

‘பொருளாதாரம் சிறப்பாக உள்ளது’

புதுதில்லி,ஆக.23-  மோட்டார் வாகனத்துறை, நுகர் பொருள் வணிகம் பெரும் சரிவை சந்தித் துள்ள நிலையிலும்  பெரிய தொழில் நிறுவனங்களிலிருந்து ஆயிரக் கணக்கானோர் வேலையைவிட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள அபாய நிலையிலும் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாகவும் வரி மற்றும் தொழிலாளர் துறையில் சீர்திருத்தங் கள் தொடரும் என்றும் மத்திய பாஜக அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் தொழில் வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் அச்சநிலையில் உள்ளனர்.
 

ஜிஎஸ்டி வரிச் சுமையால் பல் வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசு பின்பற்றும் மோச மான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்வதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பொரு ளாதார நிலை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன் தில்லி யில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக அளவில் பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது. பிற நாடு களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாகவே உள்ளது.  அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் கூட பொரு ளாதார சரிவை சந்திக்கின்றன. பொரு ளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு. உலகில் வேகமாக வளரும் பொரு ளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீத அளவிலேயே உள்ளது. அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.  பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். பொரு ளாதார சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக் கிறது என்று தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

  • வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும்.
  • கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. 
  • இந்திய பொருளாதார நிலை சீராக உள்ளது, சிறுசிறு குறைபாடுகள் களையப்படும். ஜிஎஸ்டி வரியில் உள்ள சிக்கல்கள் களையப்படும், எளிமைப்படுத்தப்படும். எளிதாக தொழில் தொடங்கும் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். நீண்ட கால  குறுகியகால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிப்பு இனி கிடையாது.
  • மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, நிதி எண் 2 சட்டம் 2019- ஆல் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய நிலை மீட்டமைக்கப்படு கிறது.
  • வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை.
  • பங்குசந்தையில் முதலீடு செய்வ தற்கு ஊக்கம் தரப்படும்.
  • ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தா லோசித்து, பணம் திரும்ப செலுத்தும்  முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.
  • கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மீறல்கள் கிரிமினல் குற்றமாக  கருதப்படாது. அதற்கு பதிலாக சிவில் குற்றமாகவே  கருதப்படும்.
  • அக்டோபர் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு அனைத்து வருமான வரி உத்தரவுகள், அறிவிப்புகள், சம்மன், கடிதங்கள் போன்றவை மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்பு மூலம் வழங்கப்படும்.
  • ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் தொடரும். மத்திய  பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும்.
  • பொதுத்துறை வங்கிகளுக்கு பட்  ஜெட்டில் அறிவித்த மூலதன உதவி தொடரும். வங்கிகளுக்காக மூலதன
  • உதவி மூலம் கடன் வளர்ச்சி அதி கரிக்கும்.
  • வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசு சார்பில் இருந்து ரூ.70, 000 கோடி உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.